என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் நெல் அறுவடைக்கு அதிநவீன தொழில்நுட்பம்: அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை
Byமாலை மலர்23 Jan 2018 2:59 AM GMT (Updated: 23 Jan 2018 2:59 AM GMT)
தமிழகத்தில் விவசாயிகளுக்கு நெல் அறுவடை எந்திரங்களை குறைந்த வாடகைக்கு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நெல் அறுவடை செய்வதற்கு போதுமான விவசாய தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. இதனை சரிசெய்யும் விதமாக விவசாயிகளுக்கு நெல் அறுவடை எந்திரங்களை குறைந்த வாடகைக்கு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வெளிநாடுகளில் குறிப்பாக நெல் அதிகம் விளையும் ஜப்பான், தைவான் போன்ற நாடுகளில் நெல், சோளம், கம்பு போன்ற மானாவாரி பயிர்களை அறுவடை செய்ய மிகக் குறைந்த செலவில் அறுவடை எந்திரம், பவர் டில்லர் போன்றவை பல ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளன.
எனவே, தமிழக அரசும் அறுவடைக்கு அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்திட முன்வர வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி தொடர்ந்து விவசாயத் தொழில் லாபத்தோடு நடைபெறுவதற்கு ஆளும் ஆட்சியாளர்கள் தொடர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #tamilnews
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நெல் அறுவடை செய்வதற்கு போதுமான விவசாய தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. இதனை சரிசெய்யும் விதமாக விவசாயிகளுக்கு நெல் அறுவடை எந்திரங்களை குறைந்த வாடகைக்கு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வெளிநாடுகளில் குறிப்பாக நெல் அதிகம் விளையும் ஜப்பான், தைவான் போன்ற நாடுகளில் நெல், சோளம், கம்பு போன்ற மானாவாரி பயிர்களை அறுவடை செய்ய மிகக் குறைந்த செலவில் அறுவடை எந்திரம், பவர் டில்லர் போன்றவை பல ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளன.
எனவே, தமிழக அரசும் அறுவடைக்கு அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்திட முன்வர வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி தொடர்ந்து விவசாயத் தொழில் லாபத்தோடு நடைபெறுவதற்கு ஆளும் ஆட்சியாளர்கள் தொடர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X