search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்
    X

    அரியலூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்

    அரியலூர் அருகே இரவு நேரத்தில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    ஆர்.எஸ்.மாத்தூர்:

    அரியலூர் மாவட்டம் ஆர்.எஸ்.மாத்தூர் அருகே உள்ள தெத்தேரி வெள்ளாற்றில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மணல் அள்ளி விற்பனை செய்து வந்தனர். இது குறித்து தளவாய் போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து சப்-இன் ஸ்பெக்டர்கள் சரத்குமார், ஆனந்த் ஆகியோர் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது வெள்ளாற்றில் அனுமதியின்றி 2 மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றிக்கொண்டிருந்தனர்.

    பின்னர் 2 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்த போலீசார், அனுமதியின்றி மணல் அள்ளிய ஆலத்தியூரை சேர்ந்த பிச்சைப்பிள்ளை, தெத்தேரியை சேர்ந்த செல்வராஜ், ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். tamilnews
    Next Story
    ×