search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தா.பழுர் அருகே வீடு புகுந்து 17 பவுன் நகை கொள்ளை
    X

    தா.பழுர் அருகே வீடு புகுந்து 17 பவுன் நகை கொள்ளை

    தா.பழுர் அருகே வீட்டின் கதவை திறந்து 17 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஆர்.எஸ்.மாத்தூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோரக்குடி கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல் (வயது 40), சிங்கப்பூரில் தொழிலாளியாக  வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மகேஷ்வரி (35).  இவர் கோரக்குடியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவரது சகோதரியின் மகன் விபத்தில் காயமடைந்தார்.

    இதையடுத்து அவரை பார்ப்பதற்காக மகேஷ்வரி பக்கத்து ஊரான பனையடி கிராமத்தில் உள்ள அவரது சகோதரியின் வீட்டிற்கு சென்றார். பின்னர் வீட்டிற்கு  வந்ததும் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது, பல்வேறு பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 1/2பவுன் நெக்லஸ், 5 பவுன் தாலி உள்ளிட்ட 17 பவுன் மதிப்பிலான நகைகள் கொள்ளை போயிருந்தது. இது குறித்து மகேஷ்வரி அளித்த புகாரின் பேரில் தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது மர்ம நபர்கள் வீட்டின் ஓடுகளை பிரித்து இறங்கி கொள்ளையடித்து விட்டு சென்றது தெரியவந்தது. சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×