என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மயிலாடுதுறையில் பஸ் வராததால் மாணவர்கள் திடீர் சாலை மறியல்
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள பழைய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் மாலை 5 மணி அளவில் காளி வழியாக மணல்மேட்டுக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் மணல்மேடு பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் வீட்டிற்கு செல்வது வழக்கம். அதேபோல் நேற்று மாலை 5 மணிக்கு பள்ளி, கல்லூரிகள் முடிந்தவுடன் வீட்டுக்கு செல்வதற்காக மாணவ- மாணவிகள் மயிலாடுதுறை பஸ் நிலையத்திற்கு வந்தனர். ஆனால் இரவு 7 மணி வரை காத்திருந்தும் மணல்மேடுக்கு செல்ல அரசு பஸ் வராததால் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ- மாணவிகள் பஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று மாணவ- மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலை வசதி சரியாக இல்லாததால் பஸ் வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்று கூறியும், மாணவ-மாணவிகள் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை. உடனே போலீசார், அங்கிருந்து மாணவ-மாணவிகளை அப்புறப்படுத்தி வேன் மூலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அதனை தொடர்ந்து அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளரிடம் தகவல் தெரிவித்து சிறப்பு பஸ் இரவு 7.30 மணிக்கு போலீஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டது. பின்னர் 8.30 மணி அளவில் மாணவ-மாணவிகள் சிறப்பு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
நீண்ட நேரமாகியும் மாணவ-மாணவிகள் வீட்டுக்கு வராததால் பெற்றோர்கள் பரிதவித்தனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்