search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயிலாடுதுறையில் பஸ் வராததால் மாணவர்கள் திடீர் சாலை மறியல்
    X

    மயிலாடுதுறையில் பஸ் வராததால் மாணவர்கள் திடீர் சாலை மறியல்

    மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் மணல்மேடுக்கு செல்லக்குடிய பஸ் வராததால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள பழைய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் மாலை 5 மணி அளவில் காளி வழியாக மணல்மேட்டுக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் மணல்மேடு பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் வீட்டிற்கு செல்வது வழக்கம். அதேபோல் நேற்று மாலை 5 மணிக்கு பள்ளி, கல்லூரிகள் முடிந்தவுடன் வீட்டுக்கு செல்வதற்காக மாணவ- மாணவிகள் மயிலாடுதுறை பஸ் நிலையத்திற்கு வந்தனர். ஆனால் இரவு 7 மணி வரை காத்திருந்தும் மணல்மேடுக்கு செல்ல அரசு பஸ் வராததால் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ- மாணவிகள் பஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று மாணவ- மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலை வசதி சரியாக இல்லாததால் பஸ் வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்று கூறியும், மாணவ-மாணவிகள் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை. உடனே போலீசார், அங்கிருந்து மாணவ-மாணவிகளை அப்புறப்படுத்தி வேன் மூலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    அதனை தொடர்ந்து அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளரிடம் தகவல் தெரிவித்து சிறப்பு பஸ் இரவு 7.30 மணிக்கு போலீஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டது. பின்னர் 8.30 மணி அளவில் மாணவ-மாணவிகள் சிறப்பு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    நீண்ட நேரமாகியும் மாணவ-மாணவிகள் வீட்டுக்கு வராததால் பெற்றோர்கள் பரிதவித்தனர். #tamilnews

    Next Story
    ×