search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி அருகே விபத்தில் வாலிபர் பலி
    X

    தூத்துக்குடி அருகே விபத்தில் வாலிபர் பலி

    தூத்துக்குடி அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியை அடுத்த மாப்பிள்ளையூரணியை சேர்ந்த ஆறுமுகம் மகன் ஆதிநாராயணன் (வயது 21). தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வரும் இவர் நேற்று இரவு வழக்கம் போல் பைக்கில் வேலைக்கு சென்றார்.

    தூத்துக்குடி-மதுரை பைபாஸ் சாலையில் உள்ள மடத்தூர் அருகே சென்ற போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஆதிநாராயணன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

    Next Story
    ×