search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருநாவலூர் அருகே கிணற்றில் பிளஸ்-1 மாணவி பிணம்: கொலை செய்யப்பட்டாரா?
    X

    திருநாவலூர் அருகே கிணற்றில் பிளஸ்-1 மாணவி பிணம்: கொலை செய்யப்பட்டாரா?

    திருநாவலூர் அருகே கிணற்றில் பிளஸ்-1 மாணவி பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருநாவலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா கண்டரக்கோட்டையை சேர்ந்தவர் முத்துகுமரன். இவரது மகள் பிரியதர்ஷினி (வயது16).முத்துகுமரனின் மாமனார் ஆராஅமுது. இவர் விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அருகே உள்ள பரிக்கல் கிராமத்தில் வசித்து வருகிறார்.

    இவரது வீட்டில் பிரியதர்ஷினி தங்கிஅங்குள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று காலை அவர் வழக்கம்போல் பள்ளிக்கூடம் சென்றார். அதன்பின்னர் அவர் வீடுதிரும்பவில்லை. இதனால் கவலை அடைந்த ஆராஅமுது பேத்தி பிரியதர்ஷினியை பல இடங்களில் தேடினார். எங்கும் அவரை காணவில்லை.

    இதுகுறித்து அவர் தனது மருமகன் முத்துகுமரனிடம் தெரிவித்தார். அவர் இது தொடர்பாக திருநாவலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ் பெக்டர் ராஜேந்திரன், சப்- இன்ஸ்பெக்டர் எழிலரசி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவி பிரியதர்ஷினியை தேடி வந்தனர்.

    இன்று காலை பரிக்கல் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் வயல்வேலைக்கு சென்றனர். அப்போது அந்த பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் இளம்பெண் ஒருவர் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்கள் திருநாவலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே போலீசார் விரைந்து சென்று கிணற்றில் பிணமாக கிடந்த இளம்பெண்ணின் உடலை மீட்டனர். அவர் யார் என்று விசாரணை நடத்தியபோது அது மாயமான மாணவி பிரியதர்ஷினி என்பது தெரியவந்தது. பிரியதர் ஷினி காதல் தோல்வியால் மனவேதனை அடைந்து கிணற்றில் குதித்து தற்கொலைசெய்து கொண்டாரா? அல்லது வேறு யாராவது அவரை கொலை செய்து பிணத்தை கிணற்றில் வீசி சென்றார்களா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்,

    கிணற்றில் பிளஸ்-1 மாணவி பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×