search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல்காந்தி பதவி ஏற்பு: கரூர் நகர காங்கிரசார் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
    X

    ராகுல்காந்தி பதவி ஏற்பு: கரூர் நகர காங்கிரசார் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

    காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராகுல்காந்தி நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து காங்கிரசார் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
    கரூர்:

    அகில இந்திய காங்கிரஸ்  தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராகுல் காந்தி நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து காங்கிரசார் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

    கரூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நகர தலைவர் ஆர். ஸ்டீபன்பாபு தலைமையில் கரூர் பஸ்நிலையம் அருகாமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். பின்னர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

    நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் சுரேகா பாலசந்தர், வட்டார தலைவர் ஆடிட்டர் ரவிச்சந்திரன், நகர செயலாளர் பசுவை அசோக், தான்தோன்றி குமார்,  பொதுச்செயலாளர் சின்னையன், முன்னாள் நகர தலைவர் சுப்பன், நகர செயலாளர்கள் பால முருகன், பிரபாகரன் மற்றும் திரளான காங்கிரசார் பங்கேற்றனர். பின்னர் ஸ்டீபன்பாபு பரமத்தி வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயபிரகாஷ் தலைமையில் நடந்த இனிப்பு வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் சுரேகா பாலச்சந்தர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
    Next Story
    ×