search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோட்டில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்
    X

    ஈரோட்டில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்

    ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக பி.எஸ்.என்.எல். உழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஈரோடு:

    பி.எஸ்.என்.எல் பணியாளர்களுக்கு 1.1.207 முதல் ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். 2-வது ஊதிய குழுவில் விடுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். துணை டவர் நிறுவனம் உருவாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல்.அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு 2 நாள் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அறிவித்தது.

    அதன்படி ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள பி.எஸ்.என்.எல்.ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு நேற்று முதல் வருகிறார்கள். இந்த போராட்டத்தில் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பி.எஸ்.என்.எல்.ஊழியர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதனால் வாடிக்கையாளர் சேவை மையங்கள் செயல்படவில்லை. தொலை தொடர்பு ஊழியர்களின் போராட்டத்தில் ஈடுபட்டதால் தொலை தொடர்பு குறித்த பராபரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டன.

    இன்று இரண்டாவது நாளாக பி.எஸ்.என்.எல்.ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடர்ந்தது. இதனால் ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள பொது மேலாளர் அலுவலகம், பிரப் ரோட்டில் உள்ள அலுவலகம் உள்பட ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள பி.எஸ்.என்.எல்.அலுவலகங்கள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    இது குறித்து ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரன் கூறியதாவது:-

    மூன்று முக்கிய அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறோம். இந்த போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பி.எஸ்.என்.எல்.உழியர்கள் பங்கேற்று உள்ளனர்.

    கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று பிரப் ரோட்டில் உள்ள அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இன்று 2-வது நாளாக காந்திஜி ரோட்டில் உள்ள பொது மேலாளர் அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×