search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சங்கர் கொலை வழக்கு தீர்ப்பை வீட்டில் இருந்தபடி டி.வி.யில் பார்த்த கவுசல்யா.
    X
    சங்கர் கொலை வழக்கு தீர்ப்பை வீட்டில் இருந்தபடி டி.வி.யில் பார்த்த கவுசல்யா.

    குமரலிங்கத்தில் உள்ள சங்கர் வீட்டிற்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

    குமரலிங்கத்தில் உள்ள சங்கர் வீட்டிற்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    உடுமலை சங்கர் மனைவி கவுசல்யா நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ பள்ளியில் வேலைபார்த்து வருகிறார். சங்கர் கொலை வழக்கில் தீர்ப்பு அறிவிப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பே அவர் குமரலிங்கத்தில் உள்ள சங்கர் வீட்டிற்கு வந்துவிட்டார்.

    நேற்று தீர்ப்பு அறிவித்ததையொட்டி சங்கர் வீட்டு முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 4 போலீசார் 24 மணிநேரமும் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகிறார்கள்.

    குமரலிங்கத்திற்கு வரும் வெளியூர்காரர்கள் தீவிர விசாரணைக்கு பின் அனுமதிக்கப்படுகிறார்கள்.
    Next Story
    ×