search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இனி நடிகர்கள் தேர்தலில் நிற்க மாட்டார்கள்: ஈஸ்வரன்
    X

    இனி நடிகர்கள் தேர்தலில் நிற்க மாட்டார்கள்: ஈஸ்வரன்

    ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் விஷால் டெபாசிட் இழப்பதன் மூலம் இனி நடிகர்கள் தேர்தலில் நிற்க மாட்டார்கள் என ஈஸ்வரன் கூறினார்.
    ஈரோடு:

    கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவேன் என்று அறிவித்துள்ளார். இதற்கு பின்னால் ஆளும் கட்சியினர் உள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது.

    அ.தி.மு.க.வினர் மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். இதனால் ஆளும் கட்சியினருக்கு எதிரான ஓட்டுகள் தி.மு.க.வுக்குதான் விழும். இதை தடுப்பதற்காகவே நடிகர் விஷாலை தேர்தலில் நிற்க வைத்துள்ளனர். நடிகர் விஷாலுக்கே தெரியும் டெபாசீட் கூட வாங்க மாட்டோம் என்று. இருந்தாலும் இது ஒரு வகையில் நல்லதுக்கு தான்.

    சமீப காலமாக நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய் போன்றோர் அரசியலுக்கு வருகிறார்கள் என்ற பேச்சு அடிப்படுகிறது. தற்போது விஷால் தேர்தலில் தோற்பதன் மூலம் நடிகர்களை இனி தமிழக மக்கள் நம்ப தயாராக இல்லை என்பது தெரிய வரும்.


    விஷால் டெபாசிட் இழப்பதன் மூலம் இனி நடிகர்கள் யாரும் தேர்தலில் நிற்க மாட்டார்கள்.

    ஆர்.கே.நகர் தேர்தலை பொறுத்த வரை தி.மு.க.வெற்றி பெறுவது உறுதி. அ.தி.மு.க.வை பொறுத்தவரை மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் யாரும் இல்லை.

    ஒக்கி புயலால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஆளும் கட்சியினர் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதிலேயே குறியாக உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×