என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேகர் ரெட்டி வழக்கை விசாரிக்க ஐகோர்ட்டு நீதிபதி மறுப்பு
Byமாலை மலர்25 Nov 2017 3:10 AM GMT (Updated: 25 Nov 2017 3:10 AM GMT)
சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த சேகர் ரெட்டி மனுவை விசாரிக்க நீதிபதி மறுப்பு தெரிவித்து வேறு ஒரு நீதிபதி விசாரணைக்கு பரிந்துரை செய்து உத்தரவு பிறப்பித்தார்.
சென்னை:
சென்னை தியாகராயநகரை சேர்ந்தவர் தொழிலதிபர் சேகர்ரெட்டி. இவரது வீட்டில் கடந்த ஆண்டு வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, ரூ.147 கோடி மதிப்பில் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளும், சுமார் ரூ.34 கோடி மதிப்பிற்கு புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளும், 178 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளை பதுக்கியது தொடர்பாக வருமான வரித்துறை கொடுத்த அறிக்கையின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து சேகர் ரெட்டி மற்றும் அவரது ஆட்களை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் அடிப்படையில், சேகர் ரெட்டி உள்ளிட்டோர் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
இந்த 2 வழக்குகளிலும் சேகர் ரெட்டி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியில் வந்துள்ளனர். இந்த நிலையில், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தொடர்ந்துள்ள சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் சேகர் ரெட்டி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என்றும், இந்த வழக்கை வேறு ஒரு நீதிபதி முன்பு விசாரணைக்கு பட்டியலிட, தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்வதாகவும் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் உத்தரவு பிறப்பித்தார்.
சென்னை தியாகராயநகரை சேர்ந்தவர் தொழிலதிபர் சேகர்ரெட்டி. இவரது வீட்டில் கடந்த ஆண்டு வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, ரூ.147 கோடி மதிப்பில் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளும், சுமார் ரூ.34 கோடி மதிப்பிற்கு புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளும், 178 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளை பதுக்கியது தொடர்பாக வருமான வரித்துறை கொடுத்த அறிக்கையின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து சேகர் ரெட்டி மற்றும் அவரது ஆட்களை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் அடிப்படையில், சேகர் ரெட்டி உள்ளிட்டோர் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
இந்த 2 வழக்குகளிலும் சேகர் ரெட்டி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியில் வந்துள்ளனர். இந்த நிலையில், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தொடர்ந்துள்ள சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் சேகர் ரெட்டி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என்றும், இந்த வழக்கை வேறு ஒரு நீதிபதி முன்பு விசாரணைக்கு பட்டியலிட, தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்வதாகவும் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் உத்தரவு பிறப்பித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X