search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொள்ளாச்சி நகராட்சியை கண்டித்து பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்திய தி.மு.க.வினர் கைது
    X

    பொள்ளாச்சி நகராட்சியை கண்டித்து பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்திய தி.மு.க.வினர் கைது

    பொள்ளாச்சி நகராட்சியை கண்டித்து பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்திய தி.மு.க.வினர் 47 பேர் கைது செய்யப்பட்டனர்.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு குப்பைகளை கையாள்வதற்காக சமீபத்தில் வரி விதிக்கப்பட்டது. ரூ. 500 சொத்து வரி கட்டுபவர்களுக்கு ரூ. 60 குப்பை அள்ளும் வரியாகவும், அதற்கு மேல் சொத்து வரியை பொறுத்து கூடுதல் வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

    இதனை கண்டித்து இன்று காலை 50-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் நகராட்சி அலுவலகம் முன் பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் பிறப்பு, இறப்பு சான்றிதழுக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்தும் கோ‌ஷம் எழுப்பினார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. நகர செயலாளர் தென்றல் செல்வராஜ் உள்பட 47 பேரை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×