என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரியலூர் அருகே சஸ்பெண்டு செய்யப்பட்டதால் ரேஷன் கடை பெண் ஊழியர் தற்கொலை
Byமாலை மலர்22 Nov 2017 10:11 AM GMT (Updated: 22 Nov 2017 10:11 AM GMT)
அரியலூர் அருகே பணியிடை நீக்கம் செய்த காரணத்தால் ரேஷன் கடை பெண் ஊழியர் மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வாணதிராயன்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜராஜசோழன். இவரது மனைவி நிவேதா (வயது 26). இவர் கழுவன் தோண்டி கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பறக்கும் படை அதிகாரிகள் ரேஷன் கடையில் ஆய்வு செய்தபோது, சரக்கு குறைவாக இருந்துள்ளது. இதனால் கூட்டுறவு சங்கங்களின் அரியலூர் மண்டல இணைப்பதிவாளர் தயாளன், நிவேதாவை பணியிடை நீக்கம் செய்தார். இதனால் அவர் வேலையில்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நிவேதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. பணியிடைநீக்கம் செய்யப்பட்டதன் காரணமாக மனமுடைந்து நிவேதா தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வாணதிராயன்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜராஜசோழன். இவரது மனைவி நிவேதா (வயது 26). இவர் கழுவன் தோண்டி கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பறக்கும் படை அதிகாரிகள் ரேஷன் கடையில் ஆய்வு செய்தபோது, சரக்கு குறைவாக இருந்துள்ளது. இதனால் கூட்டுறவு சங்கங்களின் அரியலூர் மண்டல இணைப்பதிவாளர் தயாளன், நிவேதாவை பணியிடை நீக்கம் செய்தார். இதனால் அவர் வேலையில்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நிவேதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. பணியிடைநீக்கம் செய்யப்பட்டதன் காரணமாக மனமுடைந்து நிவேதா தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X