search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமங்கலத்தில் திருமணமான 8 மாதத்தில் கல்லூரி மாணவி மாயம்
    X

    திருமங்கலத்தில் திருமணமான 8 மாதத்தில் கல்லூரி மாணவி மாயம்

    திருமங்கலத்தில் திருமணமான 8 மாதத்தில் கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பேரையூர்:

    தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே உள்ள ஜே.கே.பட்டியைச் சேர்ந்தவர் ராஜ்கிரண். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வர்ஷினி என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அதன் பின் ராஜ்கிரண் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார். வர்ஷினி விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் தங்கி 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று வர்ஷினியை, அவரது தம்பி ஊருக்கு அழைத்துச் செல்வதற்காக கல்லூரிக்கு வந்தார். பின்னர் 2 பேரும் ஊருக்கு பஸ்சில் சென்றனர்.

    திருமங்கலம் பஸ் நிலையத்தில் இறங்கிய வர்ஷினி கழிப்பறைக்கு சென்று விட்டு வருவதாக தம்பியிடம் கூறிவிட்டுச் சென்றார். அதன் பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பவில்லை.

    இதனால் பதற்றம் அடைந்த வர்ஷினியின் தம்பி பல இடங்களில் தேடி பார்த்தார். அவரை காணவில்லை.

    இது குறித்த புகாரின் பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×