என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 2 வாலிபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
Byமாலை மலர்20 Nov 2017 10:21 AM GMT (Updated: 20 Nov 2017 10:21 AM GMT)
வளவனுர் அருகே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 2 வாலிபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்த போலீசார் அவர்களை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வளவனுர் அருகே உள்ள ராம்பாக்கத்தை சேர்ந்தவர்கள் தீபன் சக்கரவர்த்தி (வயது23), வினோத்குமார் (22). இவர்கள் 2 பேரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
மேலும் அந்த பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடப் போவதாக மிரட்டினர்.
இது குறித்த புகாரின் பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபன்சக்கரவர்த்தி, வினோத்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் அவர்கள் 2 பேரும் கோர்ட்டில் ஜாமீன் பெற்று வெளியே வந்தனர். இந்நிலையில் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.
இதையடுத்து அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீசாருக்கு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார். இதையடுத்து தீபன்சக்கரவர்த்தி, வினோத்குமார் ஆகிய 2 பேரையும் வளவனூர் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் வளவனுர் அருகே உள்ள ராம்பாக்கத்தை சேர்ந்தவர்கள் தீபன் சக்கரவர்த்தி (வயது23), வினோத்குமார் (22). இவர்கள் 2 பேரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
மேலும் அந்த பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடப் போவதாக மிரட்டினர்.
இது குறித்த புகாரின் பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபன்சக்கரவர்த்தி, வினோத்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் அவர்கள் 2 பேரும் கோர்ட்டில் ஜாமீன் பெற்று வெளியே வந்தனர். இந்நிலையில் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.
இதையடுத்து அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீசாருக்கு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார். இதையடுத்து தீபன்சக்கரவர்த்தி, வினோத்குமார் ஆகிய 2 பேரையும் வளவனூர் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X