என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து - நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்
Byமாலை மலர்18 Nov 2017 9:12 AM GMT (Updated: 18 Nov 2017 9:12 AM GMT)
சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் காந்தி சிலை அருகே அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று இரவு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள மீட்டர் பாக்சில் மின்கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்தது. அப்போது காற்று வீசியதால் தீ மளமளவென பரவியது. இதனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் அவசர, அவசரமாக அலறியடித்துக்கொண்டு ஓடினர்.
உடனடியாக ஆஸ்பத்திரி ஊழியர்கள் மின்கம்பத்தில் ஏறி அங்கு மின்சப்ளையை தடை செய்தனர். இதனால் ஆஸ்பத்திரி இருளில் மூழ்கியது. உடனடியாக மின்சப்ளை தடை செய்யப்பட்டதால் பெரும் தீ விபத்து தடுக்கப்பட்டது.
பின்னர் ஆஸ்பத்திரியில் இருந்த மீட்டர் பாக்ஸ் சீரமைக்கப்பட்டது. நோயாளிகள் அனைவரும் சிகிச்சை பெறுவதற்காக ஆஸ்பத்திரிக்கு திரும்பினர். ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட இந்த திடீர் தீ விபத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் காந்தி சிலை அருகே அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று இரவு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள மீட்டர் பாக்சில் மின்கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்தது. அப்போது காற்று வீசியதால் தீ மளமளவென பரவியது. இதனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் அவசர, அவசரமாக அலறியடித்துக்கொண்டு ஓடினர்.
உடனடியாக ஆஸ்பத்திரி ஊழியர்கள் மின்கம்பத்தில் ஏறி அங்கு மின்சப்ளையை தடை செய்தனர். இதனால் ஆஸ்பத்திரி இருளில் மூழ்கியது. உடனடியாக மின்சப்ளை தடை செய்யப்பட்டதால் பெரும் தீ விபத்து தடுக்கப்பட்டது.
பின்னர் ஆஸ்பத்திரியில் இருந்த மீட்டர் பாக்ஸ் சீரமைக்கப்பட்டது. நோயாளிகள் அனைவரும் சிகிச்சை பெறுவதற்காக ஆஸ்பத்திரிக்கு திரும்பினர். ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட இந்த திடீர் தீ விபத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X