என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.ஏ.எஸ். தேர்வில் ஐ.பி.எஸ். அதிகாரி காப்பி அடித்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
Byமாலை மலர்16 Nov 2017 3:50 AM GMT (Updated: 16 Nov 2017 3:50 AM GMT)
ஐ.ஏ.எஸ். தேர்வில் ஐ.பி.எஸ். அதிகாரி காப்பி அடித்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை:
ஐ.ஏ.எஸ். முதன்மை தேர்வு கடந்த மாதம் நடந்தது. சென்னையில் நடந்த தேர்வில் செல்போன் ‘புளுடூத்’ மூலம் காப்பி அடித்ததாக நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய ஐ.பி.எஸ். அதிகாரி சபீர் கரீம் பிடிபட்டார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சபீர் கரீம் காப்பி அடிக்க உதவியதாக அவருடைய மனைவி ஜாய்சி, மானேஜர் மற்றும் 2 நண்பர்கள் என 5 பேர் கைது செய்யப்பட்டனர். கைக்குழந்தையுடன் சிறையில் அடைக்கப்பட்ட ஜாய்சி மட்டும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
சபீர் கரீம் காப்பி அடித்த வழக்கை எழும்பூர் போலீசார் விசாரித்து வந்தனர். இந்தநிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘சபீர் கரீம் வழக்கு தொடர்பான ஆவணங்களை கேட்டுள்ளோம். அது கிடைத்தவுடன் தனிப்படை அமைத்து விசாரணையை மேற்கொள்வோம்.’ என்றார்.
ஐ.ஏ.எஸ். முதன்மை தேர்வு கடந்த மாதம் நடந்தது. சென்னையில் நடந்த தேர்வில் செல்போன் ‘புளுடூத்’ மூலம் காப்பி அடித்ததாக நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய ஐ.பி.எஸ். அதிகாரி சபீர் கரீம் பிடிபட்டார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சபீர் கரீம் காப்பி அடிக்க உதவியதாக அவருடைய மனைவி ஜாய்சி, மானேஜர் மற்றும் 2 நண்பர்கள் என 5 பேர் கைது செய்யப்பட்டனர். கைக்குழந்தையுடன் சிறையில் அடைக்கப்பட்ட ஜாய்சி மட்டும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
சபீர் கரீம் காப்பி அடித்த வழக்கை எழும்பூர் போலீசார் விசாரித்து வந்தனர். இந்தநிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘சபீர் கரீம் வழக்கு தொடர்பான ஆவணங்களை கேட்டுள்ளோம். அது கிடைத்தவுடன் தனிப்படை அமைத்து விசாரணையை மேற்கொள்வோம்.’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X