என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பவானி அருகே பிளஸ்-1 மாணவி தீக்குளித்து தற்கொலை
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள கல்பாவி முத்து ரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி மனைவி பெயர் பூங்கொடி. இவர்களது மகள் வைஷ்ணவி (வயது 15). இவர் பவானி அருகே உள்ள மைலம்பாடி அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
இன்று காலை 7.30 மணியளவில் வீட்டில் இருந்த மாணவி வைஷ்ணவி திடீரென தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்தார்.
அவர் உடலில் தீ பிடித்து கொளுந்து விட்டு எரிந்தது. வலி பொறுக்காமல் அலறினார்.
மகளின் சத்தம் கேட்டு அவரது தாயார் கதவை திறந்து கொண்டு ஓடிச் சென்று பார்த்தார். அங்கு தன் மகள் தீயில் எரிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கூக்குரலிட்டார்.
அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மாணவியின் உடலில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் சம்பவ இடத்திலேயே மாணவி வைஷ்ணவி உடல் கருகி பரிதாபமாக இறந்து விட்டார்.
இந்த பரிதாப சம்பவம் குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாணவி வைஷ்ணவி எதற்காக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்