search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வில்லியனூர் அருகே விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் உள்பட 2 பேர் பலி
    X

    வில்லியனூர் அருகே விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் உள்பட 2 பேர் பலி

    வில்லியனூர் அருகே இன்று காலை மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதியதில் என்ஜினீயரிங் மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
    திருபுவனை:

    திருபுவனை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவர். இவர் அங்குள்ள கூட்டுறவு நூற் பாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் அமரன் (வயது 24). இவர் அங்குள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.

    இதே தொழிற்சாலையில் அதே பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் பரத் குமார் (வயது 19). இவர் மதகடிப்பட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இன்று காலை அமரனும், பரத்குமாரும் மோட்டார் சைக்கிளில் புதுவைக்கு வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை அமரன் ஓட்டி வந்தார். பரத்குமார் பின்னால் அமர்ந்து வந்தார்.

    வில்லியனூர் அருகே வடமங்கலம் முருகன் கோவில் அருகே வந்த போது அந்த வழியாக வந்த மினி லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் சம்பவ இடத்திலேயே பரத்குமார் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த அமரன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியில் இறந்து போனார்.

    இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாசங்கர் வல்லட், சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×