என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மீனவர்கள் மீது கடலோர காவல் படையினர் துப்பாக்கி சூடு: ஐகோர்ட்டில் வழக்கு தொடர வக்கீல் முடிவு
Byமாலை மலர்14 Nov 2017 9:38 AM GMT (Updated: 14 Nov 2017 9:39 AM GMT)
தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல் படையினர் நடத்திய துப்பாக்கி சூடு பற்றி விசாரிக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர உள்ளார்.
சென்னை:
சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் வழக்குகளை விசாரிக்க தொடங்கினார்கள்.
அப்போது வக்கீல் மவுரியா என்பவர் ஆஜராகி, ‘ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் சிலர் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த அந்த மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதில் மீனவர்கள் உடலில் குண்டு பாய்ந்து, படுகாயமடைந்துள்ளனர். இதுநாள் வரை இலங்கை கடற்படையினர் தான் நம் மீனவர்களை சுட்டுக் கொன்றனர். இப்போது இந்திய கடலோர காவல் படையும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்ய தொடங்கி விட்டது. எனவே, இந்த சம்பவம் குறித்து வழக்கு தொடர உள்ளேன்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை தாக்கல் செய்தால், வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறினார்கள்.
சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் வழக்குகளை விசாரிக்க தொடங்கினார்கள்.
அப்போது வக்கீல் மவுரியா என்பவர் ஆஜராகி, ‘ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் சிலர் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த அந்த மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதில் மீனவர்கள் உடலில் குண்டு பாய்ந்து, படுகாயமடைந்துள்ளனர். இதுநாள் வரை இலங்கை கடற்படையினர் தான் நம் மீனவர்களை சுட்டுக் கொன்றனர். இப்போது இந்திய கடலோர காவல் படையும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்ய தொடங்கி விட்டது. எனவே, இந்த சம்பவம் குறித்து வழக்கு தொடர உள்ளேன்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை தாக்கல் செய்தால், வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X