search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் அருகே தூங்கி கொண்டிருந்த பெண்ணை மிரட்டி 9 பவுன் நகை பறிப்பு
    X

    திருப்பூர் அருகே தூங்கி கொண்டிருந்த பெண்ணை மிரட்டி 9 பவுன் நகை பறிப்பு

    திருப்பூர் அருகே பெண்ணை மிரட்டி 9 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் அருகே உள்ள அனுப்பர் பாளையம் சின்ன பொம்ம நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி பரமேஸ்வரி (34).

    நேற்று இரவு தங்கராஜ் மற்றும் அவரது குழந்தைகள் வீட்டின் அறையில் தூங்கினார்கள். பரமேஸ்வரி ஹாலில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.கதவை பூட்டாமல் சாத்தி வைத்துள்ளார். இன்று அதிகாலை அங்கு 3 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் கதவை திறந்து உள்ளே புகுந்தனர். இதனால் விழித்து கொண்ட பரமேஸ்வரி சத்தம் போட முயன்றார். அவரை மர்ம நபர்கள் மிரட்டினார்கள். தாங்கள் கொண்டு வந்த உருட்டுக்கட்டையால் தாக்கி விடுவோம் என எச்சரித்தனர்.

    பின்னர் பரமேஸ்வரியை மிரட்டி அவர் கழுத்து, கை, கால்களில் அணிந்திருந்த நகைகைய கழற்றி தருமாறு கேட்டனர். பயந்து போன அவர் 9 பவுன் நகையை கழற்றி கொடுத்தார்.

    பின்னர் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். அவர்கள் சென்ற பின் பரமேஸ்வரி சத்தம் போட்டார். பக்கத்து அறையில் படுத்து இருந்த கணவர் தங்கராஜ் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். அவர்கள் கொள்ளையர்களை தேடினார்கள். அனால் கண்டு பிடிக்க முடியவில்லை.

    இது குறித்து அனுப்பர் பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து பெண்ணிடம் நகை பறித்து சென்ற 3 பேரை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×