என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெருந்துறை அருகே ஓடும் லாரி தீ பிடித்து எரிந்தது: டிரைவர் தப்பினார்
Byமாலை மலர்9 Nov 2017 8:12 AM GMT (Updated: 9 Nov 2017 8:13 AM GMT)
பெருந்துறை அருகே ஓடும் லாரி தீப்பிடித்து எரிந்த விபத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதில் லாரியில் இருந்த வேட்டி- துண்டுகள் எரிந்து சேதமானது.
பெருந்துறை:
பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் அடுத்துள்ள கள்ளியம்புதூரில் பல தறி குடோன்கள் உள்ளன. இங்குள்ள வேட்டி- துண்டுகளை வாங்கி கேரளாவுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்வார்கள். அதன்படி இன்று அதிகாலை சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான லாரியில் வேட்டி - துண்டு லோடு ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு புறப்பட்டது. லாரியை அதே ஊரைச் சேர்ந்த சுரேஷ் (வயது 33) என்பவர் ஓட்டிச் சென்றார்.
அதிகாலை 3.30 மணியளவில் இந்த லாரி பெருந்துறை சிப்காட் அருகே வந்த போது லாரியில் எரிந்த ஒரு லைட்டிலிருந்து கசிவு ஏற்பட்டு ‘பொறி’ பறந்து வேட்டி-துண்டு மீது விழுந்து தீ பிடித்தது.
இதை கண்ட டிரைவர் சுரேஷ் உடனே லாரியை ஓரமாக நிறுத்தி கீழே குதித்து உயிர் தப்பினார். பிறகு இது பற்றி பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
நிலைய அலுவலர் பாஸ்கரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் லாரியில் எடுத்து கொண்டு வரப்பட்ட வேட்டி- துண்டுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகி விட்டது. மேலும் லாரியின் பின்பகுதியும் எரிந்து சேதமானது.
இந்த சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓடும் லாரியில் தீ பிடித்த சம்பவம் பெருந்துறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் அடுத்துள்ள கள்ளியம்புதூரில் பல தறி குடோன்கள் உள்ளன. இங்குள்ள வேட்டி- துண்டுகளை வாங்கி கேரளாவுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்வார்கள். அதன்படி இன்று அதிகாலை சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான லாரியில் வேட்டி - துண்டு லோடு ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு புறப்பட்டது. லாரியை அதே ஊரைச் சேர்ந்த சுரேஷ் (வயது 33) என்பவர் ஓட்டிச் சென்றார்.
அதிகாலை 3.30 மணியளவில் இந்த லாரி பெருந்துறை சிப்காட் அருகே வந்த போது லாரியில் எரிந்த ஒரு லைட்டிலிருந்து கசிவு ஏற்பட்டு ‘பொறி’ பறந்து வேட்டி-துண்டு மீது விழுந்து தீ பிடித்தது.
இதை கண்ட டிரைவர் சுரேஷ் உடனே லாரியை ஓரமாக நிறுத்தி கீழே குதித்து உயிர் தப்பினார். பிறகு இது பற்றி பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
நிலைய அலுவலர் பாஸ்கரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் லாரியில் எடுத்து கொண்டு வரப்பட்ட வேட்டி- துண்டுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகி விட்டது. மேலும் லாரியின் பின்பகுதியும் எரிந்து சேதமானது.
இந்த சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓடும் லாரியில் தீ பிடித்த சம்பவம் பெருந்துறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X