என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேந்தமங்கலம் அருகே 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை
Byமாலை மலர்23 Oct 2017 11:08 AM GMT (Updated: 23 Oct 2017 11:08 AM GMT)
சேந்தமங்கலம் அருகே 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார்.
கொல்லிமலை:
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்த செல்லியாயிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். லாரி டிரைவர் இவரது மனைவி பவிதா (வயது 30) இவர்களுக்கு ஹேமந்த் (9), தீவந்த் (6) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
நாமக்கல்லில் குடியிருந்த பரிதாவால் வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை. இதனால் சொந்த ஊருக்கு வந்து விடுமாறு கூறிவிட்டு கணவர் லாரி வேலைக்கு சென்றுவிட்டார். மாமனார் வீட்டில் வசிக்க விருப்பம் இல்லாத பவிதா நாமக்கல்லில் இருந்து ஊருக்கு வரும்போது குளிர்பான பாட்டிலையும், விஷத்தையும் வாங்கி விட்டு ஊருக்கு வந்தார்.
பின்னர் செல்லியாயி பாளையத்தில் தனது 2 குழந்தைகளுக்கும் குளிர்பானத்தில் விஷத்தை கலந்து கொடுத்து விட்டு அதை தானும் குடித்தார். 3 பேரும் மயங்கி விழுந்தனர். அவர்களை சேலம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று 11.30 மணிக்கு பவிதா இறந்து போனார். 2 குழந்தைகளும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்த செல்லியாயிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். லாரி டிரைவர் இவரது மனைவி பவிதா (வயது 30) இவர்களுக்கு ஹேமந்த் (9), தீவந்த் (6) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
நாமக்கல்லில் குடியிருந்த பரிதாவால் வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை. இதனால் சொந்த ஊருக்கு வந்து விடுமாறு கூறிவிட்டு கணவர் லாரி வேலைக்கு சென்றுவிட்டார். மாமனார் வீட்டில் வசிக்க விருப்பம் இல்லாத பவிதா நாமக்கல்லில் இருந்து ஊருக்கு வரும்போது குளிர்பான பாட்டிலையும், விஷத்தையும் வாங்கி விட்டு ஊருக்கு வந்தார்.
பின்னர் செல்லியாயி பாளையத்தில் தனது 2 குழந்தைகளுக்கும் குளிர்பானத்தில் விஷத்தை கலந்து கொடுத்து விட்டு அதை தானும் குடித்தார். 3 பேரும் மயங்கி விழுந்தனர். அவர்களை சேலம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று 11.30 மணிக்கு பவிதா இறந்து போனார். 2 குழந்தைகளும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X