என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாலையில் நடந்து சென்றவர் மோட்டார் சைக்கிள் மோதி பலி
Byமாலை மலர்21 Oct 2017 1:20 PM GMT (Updated: 21 Oct 2017 1:20 PM GMT)
ஆவுடையார்கோவிலில் சாலையில் நடந்து சென்றவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் காயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
ஆவுடையார்கோவில்:
ஆவுடையார்கோவில் ஒன்றியம் பாதிரக்குடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வசேகர் (வயது 55). இவர் நேற்று ஆவுடையார்கோவிலில் உள்ள அறந்தாங்கி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஆவுடையார்கோவிலை சேர்ந்த உத்திராபதி மகன் ரமேஷ் (30) என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக செல்வசேகர் மீது மோதியது.
இதில் செல்வசேகர், ரமேஷ் ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள், அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செல்வசேகர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
ரமேஷ் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் ஆவுடையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஆவுடையார்கோவில் ஒன்றியம் பாதிரக்குடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வசேகர் (வயது 55). இவர் நேற்று ஆவுடையார்கோவிலில் உள்ள அறந்தாங்கி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஆவுடையார்கோவிலை சேர்ந்த உத்திராபதி மகன் ரமேஷ் (30) என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக செல்வசேகர் மீது மோதியது.
இதில் செல்வசேகர், ரமேஷ் ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள், அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செல்வசேகர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
ரமேஷ் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் ஆவுடையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X