search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனுப்பானடியில் தீக்குளித்து தொழிலாளி தற்கொலை
    X

    அனுப்பானடியில் தீக்குளித்து தொழிலாளி தற்கொலை

    அனுப்பானடியில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்தார்.

    மதுரை:

    அனுப்பானடி தெய்வக்கன்னி தெருவைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 30) லோடுமேன். திருமணமாகாத இவர், குடிப்பழகத்திற்கு அடிமையாகி இருந்தார். அடிக்கடி மது அருந்தியதால் குடும்பத்தினர் கண்டித்தனர்.

    இதனால் மனவேதனை அடைந்த ரவிக்குமார், கடந்த 11-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் கருகிய அவரை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரவிக்குமார் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×