search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜபாளையத்தில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி: வாலிபர் கைது
    X

    ராஜபாளையத்தில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி: வாலிபர் கைது

    ராஜபாளையத்தில் நடந்து சென்ற பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானர்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே உள்ள தென்காசி மெயின் ரோட்டில் நேற்று இரவு 45 வயது மதிக்கத்தக்க பெண் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அவர் ரோட்டை கடக்க முயன்ற போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

    இதில் படுகாயமடைந்த அந்த பெண் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல் ஏசுதாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    அப்போது விபத்தை பார்த்தவர்கள் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் விபத்தை ஏற்படுத்தி தப்பிச் சென்றது சேத்தூர் மேட்டுப்பட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    மேலும் விபத்தில் இறந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×