என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சாயல்குடியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம்
கடலாடி:
சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சித்த மருத்துவப்பிரிவு சார்பில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு ஆண்கள்கள் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
வட்டார மருத்துவ அலுவலர் சிவராம பாண்டியன் தலைமை தாங்கினார். சித்த மருத்துவ அலுவலர்கள் சாந்தி, இலக்கியா முன்னிலை வகித்தனர்.
சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சேகர் வரவேற்றார். ராமநாதபுரம் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பார்த்திபன் டெங்கு கொசுக்கள் உற்பத்தி மற்றும் காய்ச்சலைத் தடுக்கும் முறைகள் குறித்து செயல்முறையுடன் விளக்கி பேசியதுடன் மாணவ-மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.
இதனை தொடர்ந்து சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சை பெற வந்த உள் நோயாளிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், பஸ் நிலைய வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்