search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாலாப்பேட்டை அரசு பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது
    X

    லாலாப்பேட்டை அரசு பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது

    லாலாப்பேட்டை சந்தைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் டெங்கு விழிப்புணர்வுவை முன்னிட்டு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
    லாலாப்பேட்டை:

    லாலாப்பேட்டை சந்தைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் டெங்கு விழிப்புணர்வுவை முன்னிட்டு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. முகாமை பஞ்சப்பட்டி வட்டார மருத்துவ அதிகாரி சகிலா தலைமையேற்று தொடக்கி வைத்தார். சிறப்பு அமைப்பாளராக கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி அதிகாரி (ஊராட்சிகள்) கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு பேசினார்.

    இதில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.முன்னதாக டெங்கு விழிப்புணர்வு குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    முகாமில் நடமாடும் மருத்துவர் தமிழ் வாணன் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கதிரவன் மற்றும் தலைமையாசிரியர் புவனேஸ்வரி கலந்து கொண்டனர்.
    Next Story
    ×