search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரியை மிரட்டிய வாலிபர் கைது
    X

    சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரியை மிரட்டிய வாலிபர் கைது

    சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரியை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை மண்ணடியை சேர்ந்தவர் ஜமால் ஜேக் மரைக்காயர் (39). இவர் சுற்றுலா விசாவில் அடிக்கடி அரபு நாடுகளுக்கு சென்று வருவது வழக்கம்.

    கடந்த 1-ந் தேதி துபாய் சென்றுவிட்டு நண்பர்கள் மூவருடன் ஜமால் சென்னை திரும்பினார்.

    அப்போது சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் சோதனை நடத்தினர். அதில் 24 கேரட் தங்க கட்டிகள் 79 கிராம் பிடிபட்டது. மேலும் வெளிநாட்டு சிகரெட்டுகள், விலை உயர்ந்த செண்ட் போன்றவை அவர் கொண்டு வந்தது தெரிய வந்தது.

    விதிமுறைக்கு மாறாக வெளிநாட்டில் இருந்து பொருட்கள் கொண்டு வருவது முறையல்ல என சுங்க அதிகாரிகள் அவரை கண்டித்தனர்.

    அப்போது ஜமாலுக்கும் அதிகாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.தகாத வார்த்தைகளால் அவர் திட்டியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து சூப்பிரண்டு எல்டோ விமான நிலைய போலீசில் 4 பேர் மீதும் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் தீனதயாளன் ஆகியோர் வழக்குபதிவு செய்து 4 பேரையும் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் பாரிமுனையில் ஜமாலை போலீசார் நேற்று கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.மற்ற 3 பேரையும் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×