என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாடகை கட்டணம் செலுத்த முடியாத வேதனையில் ஆட்டோ டிரைவர் தற்கொலை
Byமாலை மலர்13 Oct 2017 10:42 AM GMT (Updated: 13 Oct 2017 10:42 AM GMT)
புதுவையில் ஆட்டோ உரிமையாளருக்கு வாடகை பாக்கி செலுத்த முடியாத வேதனையில் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை வாணரப்பேட்டை ரொசாரியோ வீதியை சேர்ந்தவர் ராஜா (வயது 51). இவர் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்தார். இவரது 2 மகன்களும் ஆட்டோ ஓட்டி வருகிறார்கள்.
இதற்கிடையே ராஜா ஆட்டோ உரிமையாளருக்கு வாடகை பாக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆட்டோ உரிமையாளர் வாடகை பாக்கியை கேட்டு ராஜாவுக்கு நெருக்கடி கொடுத்து வந்ததாக தெரிகிறது.
இதுபற்றி ராஜா தனது மனைவியிடம் கூறி வருத்தப்பட்டு வந்துள்ளார். அதற்கு அவரது மனைவி சமாதானம் கூறி வந்தார்.
ஆனாலும் ராஜா சமாதானம் அடையாமல் மன வருத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை ராஜாவின் மகன்கள் ஆட்டோ ஓட்ட சென்றுவிட்டனர். அவரது மனைவி பால் வாங்க வெளியே சென்றிருந்தார். அப்போது ராஜா வீட்டில் ஆஸ்பெட்டாஸ் கூரையில் மனைவியின் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவை வாணரப்பேட்டை ரொசாரியோ வீதியை சேர்ந்தவர் ராஜா (வயது 51). இவர் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்தார். இவரது 2 மகன்களும் ஆட்டோ ஓட்டி வருகிறார்கள்.
இதற்கிடையே ராஜா ஆட்டோ உரிமையாளருக்கு வாடகை பாக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆட்டோ உரிமையாளர் வாடகை பாக்கியை கேட்டு ராஜாவுக்கு நெருக்கடி கொடுத்து வந்ததாக தெரிகிறது.
இதுபற்றி ராஜா தனது மனைவியிடம் கூறி வருத்தப்பட்டு வந்துள்ளார். அதற்கு அவரது மனைவி சமாதானம் கூறி வந்தார்.
ஆனாலும் ராஜா சமாதானம் அடையாமல் மன வருத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை ராஜாவின் மகன்கள் ஆட்டோ ஓட்ட சென்றுவிட்டனர். அவரது மனைவி பால் வாங்க வெளியே சென்றிருந்தார். அப்போது ராஜா வீட்டில் ஆஸ்பெட்டாஸ் கூரையில் மனைவியின் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X