search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாடகை கட்டணம் செலுத்த முடியாத வேதனையில் ஆட்டோ டிரைவர் தற்கொலை
    X

    வாடகை கட்டணம் செலுத்த முடியாத வேதனையில் ஆட்டோ டிரைவர் தற்கொலை

    புதுவையில் ஆட்டோ உரிமையாளருக்கு வாடகை பாக்கி செலுத்த முடியாத வேதனையில் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    புதுவை வாணரப்பேட்டை ரொசாரியோ வீதியை சேர்ந்தவர் ராஜா (வயது 51). இவர் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்தார். இவரது 2 மகன்களும் ஆட்டோ ஓட்டி வருகிறார்கள்.

    இதற்கிடையே ராஜா ஆட்டோ உரிமையாளருக்கு வாடகை பாக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆட்டோ உரிமையாளர் வாடகை பாக்கியை கேட்டு ராஜாவுக்கு நெருக்கடி கொடுத்து வந்ததாக தெரிகிறது.

    இதுபற்றி ராஜா தனது மனைவியிடம் கூறி வருத்தப்பட்டு வந்துள்ளார். அதற்கு அவரது மனைவி சமாதானம் கூறி வந்தார்.

    ஆனாலும் ராஜா சமாதானம் அடையாமல் மன வருத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை ராஜாவின் மகன்கள் ஆட்டோ ஓட்ட சென்றுவிட்டனர். அவரது மனைவி பால் வாங்க வெளியே சென்றிருந்தார். அப்போது ராஜா வீட்டில் ஆஸ்பெட்டாஸ் கூரையில் மனைவியின் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×