search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாட்டரி சீட்டு அச்சடித்து விற்பனை: 3 பேர் கைது
    X

    லாட்டரி சீட்டு அச்சடித்து விற்பனை: 3 பேர் கைது

    கொடைரோடு ரெயில்வே நகர் பகுதியில் லாட்டரி சீட்டுகள் அச்சடித்து விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கொடைரோடு:

    கொடைரோடு ரெயில்வேநகர் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையொட்டி அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கருப்புச்சாமி தலைமையில் போலீசார் ரெயில்வேநகரில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை செய்தனர். அப்போது அங்கு கேரள மாநில லாட்டரி சீட்டுகள் அச்சடித்து விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.

    இதையொட்டி இளையராஜா (வயது 37), சடையாண்டிபுரத்தை சேர்ந்த ராஜா (29), காட்டுநாயக்கன்பட்டியை சேர்ந்த ஜெயராஜ் (38) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் லாட்டரி சீட்டுகள் அடிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர், ஜெராக்ஸ் எந்திரம் ஆகியவற்றையும், கேரள மாநில லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×