search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளக்கோவில் அருகே கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை
    X

    வெள்ளக்கோவில் அருகே கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை

    வெள்ளக்கோவில் அருகே கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெள்ளக்கோவில்:

    வெள்ளக்கோவில் அருகே குட்டைக்காடு புதூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). பனியன் தொழிலாளி.

    இவர் கடந்த 17-ந் தேதி வீட்டை வீட்டு வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை. இதனால் அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் காணவில்லை.

    இதற்கிடையே வெள்ளக்கோவில் திருமங்கலம் பகுதியில் உள்ள ஒரு கிணறு அருகே கார்த்திக்கின் மோட்டார் சைக்கிள் நின்றது. நீண்ட நேரமாக மோட்டார் சைக்கிள் நின்றதால், அப்பகுதி மக்கள் சந்தேகமடைந்து கிணற்றை பார்த்தனர். கிணற்றில் வாலிபர் கார்த்திக் பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே இதுபற்றி வெள்ளக்கோவில் போலீ சில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வெள்ளக்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.கார்த்திக் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×