என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தவளக்குப்பம் அருகே மீனவர் தூக்குபோட்டு தற்கொலை
Byமாலை மலர்10 Sep 2017 12:28 PM GMT (Updated: 10 Sep 2017 12:28 PM GMT)
தவளக்குப்பம் அருகே பண கஷ்டத்தால் மீனவர் துக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாகூர்:
தவளக்குப்பம் அருகே நல்லவாடு வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது70), மீனவர். இவருக்கு மருவம்மாள் என்ற மனைவியும், ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகன்-மகளுக்கு திருமணமாகி அவர்கள் தனித்தனியே வசித்து வருகிறார்கள்.
மீன்பிடி தொழில் செய்து வந்த சுப்பிரமணிக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கண் ஆபரேஷன் நடந்தது. இதனால் சுப்பிரமணி மீன்பிடி தொழிலுக்கு செல்ல முடியாமல் வீட்டில் இருந்து வந்தார். இதில் அவருக்கு பண கஷ்டம் ஏற்பட்டது. செலவுக்கு பணம் இல்லாமல் தவித்து வந்தார்.
இதனால் மனமுடைந்த சுப்பிரமணி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நைலான் கயிற்றால் சுப்பிரமணி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X