search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தவளக்குப்பம் அருகே மீனவர் தூக்குபோட்டு தற்கொலை
    X

    தவளக்குப்பம் அருகே மீனவர் தூக்குபோட்டு தற்கொலை

    தவளக்குப்பம் அருகே பண கஷ்டத்தால் மீனவர் துக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பாகூர்:

    தவளக்குப்பம் அருகே நல்லவாடு வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது70), மீனவர். இவருக்கு மருவம்மாள் என்ற மனைவியும், ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகன்-மகளுக்கு திருமணமாகி அவர்கள் தனித்தனியே வசித்து வருகிறார்கள்.

    மீன்பிடி தொழில் செய்து வந்த சுப்பிரமணிக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கண் ஆபரே‌ஷன் நடந்தது. இதனால் சுப்பிரமணி மீன்பிடி தொழிலுக்கு செல்ல முடியாமல் வீட்டில் இருந்து வந்தார். இதில் அவருக்கு பண கஷ்டம் ஏற்பட்டது. செலவுக்கு பணம் இல்லாமல் தவித்து வந்தார்.

    இதனால் மனமுடைந்த சுப்பிரமணி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நைலான் கயிற்றால் சுப்பிரமணி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×