என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கச்சராயன்குட்டை ஏரியை தூர்வாரிய தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி
Byமாலை மலர்1 Sep 2017 5:21 AM GMT (Updated: 1 Sep 2017 5:21 AM GMT)
கச்சராயன்குட்டை ஏரியை தூர்வார உதவிய தி.மு.க. நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
சேலம்:
நேற்று மாலை 4.30 மணிக்கு மு.க.ஸ்டாலின் கார் மூலம் கச்சராயன்குட்டை ஏரிக்கு வந்தார். அவர் காரில் இருந்து இறங்கி ஏரிக்குள் நடந்து சென்று பார்வையிட்டார். ஏரி தூர்வாரப்பட்டது குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் ஏரி, குளங்களை தூர்வாரிட தி.மு.க. சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் தி.மு.க. சார்பில் ஏரிகள் தூர்வாரப்பட்டு மழைநீர் நிரம்பி உள்ளது. குடிநீர் இல்லாத பகுதிகளில் குடிநீர் ஆதாரம் பெருகியுள்ளது. அதற்காக இந்த பணியை செய்த தி.மு.க. நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
கச்சராயன்குட்டை ஏரியை தி.மு.க. நிர்வாகிகளும், பொதுமக்களும் தூர்வாரி அதில் உள்ள மண்ணை வெளியே கொண்டு செல்லாமல் ஏரிக்கரையை பலப்படுத்தி அழகுபடுத்தி உள்ளனர். தூர்வாரிய ஏரியை அரசியல் உள்நோக்கத்துடன் அலங்கோலப்படுத்தி உள்ளனர். இதற்கு முழு காரணம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான். முறையாக தூர்வாரி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கிய எங்களை முதல்-அமைச்சர் பாராட்டி நன்றி தெரிவித்து இருக்க வேண்டும். போனிலாவது பேசி இருக்க வேண்டும். இல்லையென்றால் தொல்லை தராமலாவது இருந்திருக்க வேண்டும். அவரது செயலை நினைத்து வேதனை அடைகிறேன். வன்மையாக கண்டிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று மாலை 4.30 மணிக்கு மு.க.ஸ்டாலின் கார் மூலம் கச்சராயன்குட்டை ஏரிக்கு வந்தார். அவர் காரில் இருந்து இறங்கி ஏரிக்குள் நடந்து சென்று பார்வையிட்டார். ஏரி தூர்வாரப்பட்டது குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் ஏரி, குளங்களை தூர்வாரிட தி.மு.க. சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் தி.மு.க. சார்பில் ஏரிகள் தூர்வாரப்பட்டு மழைநீர் நிரம்பி உள்ளது. குடிநீர் இல்லாத பகுதிகளில் குடிநீர் ஆதாரம் பெருகியுள்ளது. அதற்காக இந்த பணியை செய்த தி.மு.க. நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
கச்சராயன்குட்டை ஏரியை தி.மு.க. நிர்வாகிகளும், பொதுமக்களும் தூர்வாரி அதில் உள்ள மண்ணை வெளியே கொண்டு செல்லாமல் ஏரிக்கரையை பலப்படுத்தி அழகுபடுத்தி உள்ளனர். தூர்வாரிய ஏரியை அரசியல் உள்நோக்கத்துடன் அலங்கோலப்படுத்தி உள்ளனர். இதற்கு முழு காரணம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான். முறையாக தூர்வாரி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கிய எங்களை முதல்-அமைச்சர் பாராட்டி நன்றி தெரிவித்து இருக்க வேண்டும். போனிலாவது பேசி இருக்க வேண்டும். இல்லையென்றால் தொல்லை தராமலாவது இருந்திருக்க வேண்டும். அவரது செயலை நினைத்து வேதனை அடைகிறேன். வன்மையாக கண்டிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X