search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கச்சராயன்குட்டை ஏரியை தூர்வாரிய தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி
    X

    கச்சராயன்குட்டை ஏரியை தூர்வாரிய தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி

    கச்சராயன்குட்டை ஏரியை தூர்வார உதவிய தி.மு.க. நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
    சேலம்:

    நேற்று மாலை 4.30 மணிக்கு மு.க.ஸ்டாலின் கார் மூலம் கச்சராயன்குட்டை ஏரிக்கு வந்தார். அவர் காரில் இருந்து இறங்கி ஏரிக்குள் நடந்து சென்று பார்வையிட்டார். ஏரி தூர்வாரப்பட்டது குறித்து கேட்டறிந்தார்.

    பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் ஏரி, குளங்களை தூர்வாரிட தி.மு.க. சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் தி.மு.க. சார்பில் ஏரிகள் தூர்வாரப்பட்டு மழைநீர் நிரம்பி உள்ளது. குடிநீர் இல்லாத பகுதிகளில் குடிநீர் ஆதாரம் பெருகியுள்ளது. அதற்காக இந்த பணியை செய்த தி.மு.க. நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    கச்சராயன்குட்டை ஏரியை தி.மு.க. நிர்வாகிகளும், பொதுமக்களும் தூர்வாரி அதில் உள்ள மண்ணை வெளியே கொண்டு செல்லாமல் ஏரிக்கரையை பலப்படுத்தி அழகுபடுத்தி உள்ளனர். தூர்வாரிய ஏரியை அரசியல் உள்நோக்கத்துடன் அலங்கோலப்படுத்தி உள்ளனர். இதற்கு முழு காரணம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான். முறையாக தூர்வாரி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கிய எங்களை முதல்-அமைச்சர் பாராட்டி நன்றி தெரிவித்து இருக்க வேண்டும். போனிலாவது பேசி இருக்க வேண்டும். இல்லையென்றால் தொல்லை தராமலாவது இருந்திருக்க வேண்டும். அவரது செயலை நினைத்து வேதனை அடைகிறேன். வன்மையாக கண்டிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×