search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெடுவாசலில் 138-வது நாளாக தொடரும் போராட்டம்
    X

    நெடுவாசலில் 138-வது நாளாக தொடரும் போராட்டம்

    ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசல் பொதுமக்கள் 138-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வடகாடு:

    வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைக்கண்டித்து, நெடுவாசல் பொதுமக்கள் 2–வது கட்டமாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நேற்றும் 138–வது நாளாக நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே போராட்டம் நடைபெற்றது.

    அதில், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டும், திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய - மாநில அரசுகளை கண்டித்தும் பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பினர்.
    Next Story
    ×