search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலத்த மழையால் பில்லூர் அணை நீர்மட்டம் 92 அடியாக உயர்வு
    X

    பலத்த மழையால் பில்லூர் அணை நீர்மட்டம் 92 அடியாக உயர்வு

    நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பில்லூர் அணை நீர் மட்டம் 92 அடியாக அதிகரித்துள்ளது.
    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் காரமடை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கை எழில் சூழலில் பில்லூர் அணை அமைந்துள்ளது,

    நீலகிரி மாவட்டம் பில்லூர் அணை நீர் பிடிப்பு பகுதி மற்றும் கேரளாவில் பெய்து வரும் மழை நீரை ஆதாரமாக கொண்டு பில்லூர் அணை கட்டப்பட்டது. அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 100 அடி ஆகும். தற்போது நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    நேற்று முன்தினம் காலை 6 மணி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் உயரம் 92.5 அடியாக இருந்தது. மேலும் அணையின் நீர்மட்டம் உயர்ந்து விடாமல் இருக்க மின் உற்பத்திக்காக 2 மெசின்களை இயக்கியதில் அணையிலிருந்து வினாடிக்கு 6000 கன அடி தண்ணீர் வெளியேறியது. இதனால் அணையின் நீர் மட்டம் உயரம் படிப்படியாக குறைந்து இரவு 9 மணிக்கு 89.75 அடியாக குறைந்தது. அணைக்கு வினாடிக்கு 1754 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று நிலவரப்படி அணையின் நீர் மட்டம் உயரம் 92 அடியாக உயர்ந்து காணப்பட்டது. ஒரே இரவில் அணையின் நீர் மட்டம் உயரம் 3 அடி உயர்ந்தது.

    நேற்று மின் உற்பத்திக்காக 6.20 மணிக்கு காலை 6.30 மணிக்கும் 2 மெசின்கள் இயக்கப்பட்டு காலை 9 மணிக்கும் பகல் 12.40 மணிக்கும் மெசின்கள் இயக்குவது நிறுத்தப்பட்டது .இரண்டு மெசின்கள் இயக்கியதன் மூலம் அணையிலிருந்து வினாடிக்கு 6000 கன அடிக்கு தண்ணீர் வெளியேறியது.

    இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வெள்ளப்பெருக்கு காரணமாக மேட்டுப்பாளையம் அருகே உள்ள நெல்லிதுறை பாலத்தை தொட்டு விடும் அளவுக்கு தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது

    ஆற்றின் கரையோரப் பகுதியில் பக்தர்கள் பாதுகாப்பாக குளிக்க அமைக்கப்பட்டிருந்த இரும்பு சட்டங்களும் தண்ணீரில் மூழ்கியது.

    கோவில் நிர்வாகம் சார்பில் ஒலி பெருக்கி மூலம் பக்தர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது.
    Next Story
    ×