search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருநின்றவூர் அருகே ஆட்டோ டிரைவரிடம் வழிப்பறி செய்த 2 பேர் கைது
    X

    திருநின்றவூர் அருகே ஆட்டோ டிரைவரிடம் வழிப்பறி செய்த 2 பேர் கைது

    திருநின்றவூர் அருகே ஆட்டோ டிரைவரிடம் வழிப்பறி செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருநின்றவூர்:

    பட்டாபிராமை சேர்ந்தவர் விநாயகம். ஆட்டோ டிரைவர். இவர் ஆட்டோவில் நடுக்குப்பம் பகுதியில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் விநாயகத்தை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போன், ரூ.1000ஐ வழிப்பறி செய்து தப்பி விட்டனர்.

    இது குறித்து திருநின்றவூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட பெரியபாளையத்தை சேர்ந்த ஹேமந்த், லட்சுமணனை கைது செய்தனர்.

    Next Story
    ×