என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பெரியகுளத்தில் வியாபாரி வீட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் கீழவடகரை எஸ்.பி.ஐ. காலனி கோல்டன் சிட்டியை சேர்ந்தவர் அப்துல் நசீர். வியாபாரி. இவர் தனது குடும்பத்துடன் கோவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை திறந்து அதில் உள்ளவற்றை சுருட்டி கொண்டு தலைமறைவானார்கள்.
இதுகுறித்து வெளியூர் சென்றிருந்த அப்துல் நசீருக்கு அக்கம் பக்கம் உள்ளவர்கள் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த அவர் உடனடியாக ஊருக்கு திரும்பினார். அப்போது கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்து நகை, ரூ. 60 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் லேப்டாப், பாஸ் போர்ட் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து பெரியகுளம் போலீசில் அப்துல் நசீர் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்