search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலசப்பாக்கம் அருகே போலி டாக்டர் கைது
    X

    கலசப்பாக்கம் அருகே போலி டாக்டர் கைது

    கலசப்பாக்கம் அருகே போலி டாக்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (41) பி.எட். பட்டதாரி. இவர் நாயுடு மங்கலத்தில் கிளீனிக் நடத்தி ஆங்கில முறையில் சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

    தகவலறிந்த டாக்டர் நலப் பணிகள் இணை இயக்குநர் நவநீத லட்சுமி தலைமையிலான மருத்துவக் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

    அப்போது அவர், நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ முறை சிகிச்சை அளித்து வந்தது உறுதி செய்யப்பட்டது. அவரிடமிருந்து, சிரஞ்சுகள் மற்றும் மாத்திரைகளை மருத்துவக் குழுவினர் கைப்பற்றினர். இது குறித்து கலசப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர்.

    Next Story
    ×