search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அறந்தாங்கி அருகே மலேசிய தொழிலதிபர் வீடு உள்பட 4 வீடுகளில் கொள்ளை
    X

    அறந்தாங்கி அருகே மலேசிய தொழிலதிபர் வீடு உள்பட 4 வீடுகளில் கொள்ளை

    அறந்தாங்கி அருகே மலேசிய தொழிலதிபர் வீடு உள்பட 4 வீடுகளில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அப்துல்ஹமீது தெருவை சேர்ந்தவர் நாகூர்கனி (வயது 56). இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் மலேசியாவில் வசித்து வருகிறார். அங்கு அவருக்கு சொந்தமாக 7 உணவு விடுதிகள் உள்ளன.

    இவருக்கு சொந்தமான வீடு அறந்தாங்கியில் உள்ளது. விடுமுறை மற்றும் வரும்போது அதனை பயன்படுத்துவது வழக்கம். இந்த வீட்டை பராமரிப்பதற்காக உறவினர் ரகுபர்னிசா(36) என்பவரை நியமித்திருந்தார்.

    ரகுபர்னிசா தினமும் வந்து வீட்டை சுத்தம் செய்து பராமரித்துவிட்டு செல்வார். இந்தநிலையில் மதுரையில் உள்ள ஒரு பள்ளிவாசலில் நடைபெற்ற விழாவிற்கு ரகுபர்னிசா சென்றார். பின்னர் காலையில் வந்து வழக்கம் போல் பணிகளை தொடர்வதற்காக நாகூர்கனியின் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைந்து கிடந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மலேசியாவில் உள்ள நாகூர்கனிக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக அறந்தாங்கி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வீட்டிற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது வீட்டின் பீரோவில் வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான 20 சவரன் நகை மற்றும் 7 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதே போல் அறந்தாங்கி அருகே உள்ள பாண்டிபத்திரம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர். இவர் வெளிநாட்டில் தங்கியிருந்து பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சிவசங்கரி பாண்டிபத்திரத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் உறவினர் வீட்டில் நடைபெற்ற விசே‌ஷத்திற்காக சிவசங்கரி சென்றிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து அதில் இருந்த 20 சவரன் நகை மற்றும் 2 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து சிவசங்கரி அளித்த புகாரின் பெயரில் நாகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அறந்தாங்கி அருகே களப்பக்காடு பகுதியை சேர்ந்தவர் ரெத்தினம் (42). விவசாயி. இவர் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்காக சென்றிருந்தார். பின்னர் மாலையில் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 1சவரன் நகை மற்றும் 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. அதே பகுதியை சேர்ந்த சதுரகிரி என்பவர் (53) காலை வழக்கம் போல் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார். பின்னர் மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது பீரோவில் இருந்த žபவுன் நகை மற்றும் 20 ஆயிரம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இந்த 2 வழக்குகள் குறித்தும் அறந்தாங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டை உடைத்து கொள்ளையடி க்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×