search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவதானப்பட்டி அருகே வீட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை
    X

    தேவதானப்பட்டி அருகே வீட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

    தேவதானப்பட்டி அருகே வீட்டை பூட்டை உடைத்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலம் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது27). சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ராஜேஸ்வரி தேவதானப்பட்டியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த செயின், தோடு, கொலுசு உள்ளிட்ட நகைகளையும், ரூ.1000 பணத்தையும் கொள்ளையடித்து சென்றனர்.

    வீட்டின் கதவு உடைந்து கிடப்பதை கண்டு அக்கம்பக்கத்தினர் ராஜேஸ்வரிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வந்து பார்த்த போது நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×