search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரைக்குடியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை: கோட்டாட்சியர் விசாரணை
    X

    காரைக்குடியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை: கோட்டாட்சியர் விசாரணை

    காரைக்குடியில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

    காரைக்குடி:

    திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்தவர் போஸ். இவரது மகள் ரேவதி என்ற நிஷாந்தி (வயது 24). இவருக்கும் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கழனிவாசல் பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ரமேஷ் பிளம்பராக உள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரேவதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த காரைக்குடி வடக்கு போலீசார் விரைந்து வந்து இளம் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் இளவேனில் வழக்குப்பதிவு செய்து உள்ளார். திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் கோட்டாட்சியர் விசாரணை நடைபெறுகிறது.

    Next Story
    ×