search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊத்துக்கோட்டையில் கல்வித்துறை அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை
    X

    ஊத்துக்கோட்டையில் கல்வித்துறை அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை

    ஊத்துக்கோட்டையில் கல்வித்துறை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ரவீந்தரகுமார். கல்வித்துறை சூப்பிரண்டாக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் கடந்த 1-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் போரூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.

    நேற்று மாலை திரும்பி வந்த போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 6 சவரன் தங்க நகைகள், ரூ. 35 ஆயிரம் ரொக்கத்தை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்ட மிட்டு மர்ம கும்பல் நகை- பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    இது குறித்து ரவீந்தரகுமார் ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×