search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்கல்பட்டில் சிறுமியை கடத்தி திருமணம்: வாலிபர்-உறவினர் கைது
    X

    செங்கல்பட்டில் சிறுமியை கடத்தி திருமணம்: வாலிபர்-உறவினர் கைது

    செங்கல்பட்டில் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்ததால், உறவனிர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    செங்கல்பட்டு:

    அச்சரப்பாக்கத்தை அடுத்த சித்தாமூர், நெட்ரம்பாக்கத்தை சேர்ந்தவர் ராமு. இவரது மகன் பிரேம்குமார். இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்தார்.

    மேலும் சிறுமிக்கு தொல்லையும் கொடுத்து வந்தார். இது பற்றி அறிந்ததும் சிறுமியின் பெற்றோர், பிரேம் குமாரை கண்டித்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரேம் குமார், சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்றார். பின்னர் சிங்கபெருமாள் கோவிலில் இருவரும் திருமணம் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து செங்கல்பட்டு டவுன் தட்டான்மலை தெருவில் உள்ள வீட்டில் சிறுமியுடன் பிரேம் குமார் தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் மாயமான சிறுமியை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடி வந்தனர். இதற்கிடையே வீட்டில் இருந்து சிறுமி தப்பி வந்ததாக தெரிகிறது.

    இது குறித்து அவர், செங்கல்பட்டு மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் கடத்தல் வழக்குப் பதிவு செய்து பிரேம்குமார், அவரது உறவினர் சரவணன் ஆகிய 2 பேரை கைதுசெய்தனர்.

    Next Story
    ×