search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகங்கையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    சிவகங்கையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    நாம் தமிழர் கட்சி சார்பில் சிவகங்கை அரண்மனை வாசலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் சிவகங்கையை அடுத்த உடைகுளம் கிராமத்தில் செயல்படும் தனியார் மதுபான தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், அந்த தொழிற்சாலையை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சிவகங்கை அரண்மனை வாசலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தென் மண்டல செயலாளர் வெற்றிகுமரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில இளைஞர் பாசறை செயலாளர் தரைமுருகன், மாவட்ட பொறுப்பாளர் வேங்கை பிரபாகரன், சாயல்ராம், தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×