search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலக்கோட்டை அருகே சூதாடிய கும்பல் கைது
    X

    நிலக்கோட்டை அருகே சூதாடிய கும்பல் கைது

    நிலக்கோட்டை அருகே சூதாடிய கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் அதிக அளவு சூதாட்ட கும்பல் உலாவி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி நிலக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி தலைமையிலான போலீசார் மணியாரம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சூதாடிய கும்பலை பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ரவி (46), சீமைராஜா (45), கருப்பு (45), முத்தையா (37), முத்துராமன் மற்றும் பெருமாள் என தெரிய வந்தது.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×