search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொம்பாக்கத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவி மயங்கி விழுந்து பலி
    X

    கொம்பாக்கத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவி மயங்கி விழுந்து பலி

    கொம்பாக்கத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவி மயங்கி விழுந்து இறந்து போனார்.

    புதுச்சேரி:

    புதுவை கொம்பாக்கம் ஒட்டன் பாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி கோவிந்தம்மாள். இவர்களுக்கு 2 மகள்கள். இளைய மகள் அபிமதி (வயது 21). இவர், லாஸ் பேட்டையில் உள்ள பாலி டெக்னிக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திரன் இறந்து விட்டார். இதையடுத்து கோவிந்தம்மாள் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து மகள்களை படிக்க வைத்து வந்தார்.

    நேற்று முன்தினம் கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்த அபிமதி வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். உடனே அபிமதியை அருகில் உள்ள தனியார் கிளினிக்குக்கு அழைத்து சென்று காண்பித்தனர். உணவு ஒவ்வாமையால் வாந்தி- மயக்கம் ஏற்பட்டதாக டாக்டர்கள் கூறியதால் சிகிச்சைக்கு பின் அபிமதியை வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலையும் அபிமதிக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால் பதறிப்போன கோவிந்தம்மாள் உடனடி யாக அபிமதியை சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அபிமதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார் பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×