என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நடுரோட்டில் மதுபாட்டில்களை உடைத்து நொறுக்கிய பெண்கள்
Byமாலை மலர்25 May 2017 10:15 AM GMT (Updated: 25 May 2017 10:15 AM GMT)
புழல் அருகே மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்க வீட்டில் பதுக்கியதை, மக்கள் சாலையில் போட்டு உடைத்து நொறுக்கினர்.
செங்குன்றம்:
புழல் அருகே உள்ள விநாயகபுரம் செகரட் டரியேட் காலனியில் உள்ள வீட்டில் மதுபாட்டில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இது குறித்து அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை மதுபாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டுக்கு வந்தனர்.
அவர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த மதுபாட்டில்களை வெளியே எடுத்து வந்து செங்குன்றம் - செம்பியம் சாலையில் உடைத்து நொறுக்கினர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பரபரப்பான சாலை என்பதால் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து வந்தன. தகவல் அறிந்ததும் புழல் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் சமாதானம் பேசி கலைந்து போக செய்தனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறும்போது, கடந்த ஒரு மாதமாக இந்த வீட்டில் மதுபாட்டில் பதுக்கி விற்கப்படுவது குறித்து புகார் தெரிவித்து வந்தோம்.
ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நாங்களே மதுபாட்டில்களை உடைத்து நொறுக்கினோம். இதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யாவிட்டால் மேலும் போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்றனர்.
வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி விற்று வந்தது அதே பகுதியை சேர்ந்த செல்லையா, ராஜேஷ் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தப்பி ஓடிய அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
புழல் அருகே உள்ள விநாயகபுரம் செகரட் டரியேட் காலனியில் உள்ள வீட்டில் மதுபாட்டில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இது குறித்து அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை மதுபாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டுக்கு வந்தனர்.
அவர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த மதுபாட்டில்களை வெளியே எடுத்து வந்து செங்குன்றம் - செம்பியம் சாலையில் உடைத்து நொறுக்கினர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பரபரப்பான சாலை என்பதால் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து வந்தன. தகவல் அறிந்ததும் புழல் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் சமாதானம் பேசி கலைந்து போக செய்தனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறும்போது, கடந்த ஒரு மாதமாக இந்த வீட்டில் மதுபாட்டில் பதுக்கி விற்கப்படுவது குறித்து புகார் தெரிவித்து வந்தோம்.
ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நாங்களே மதுபாட்டில்களை உடைத்து நொறுக்கினோம். இதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யாவிட்டால் மேலும் போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்றனர்.
வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி விற்று வந்தது அதே பகுதியை சேர்ந்த செல்லையா, ராஜேஷ் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தப்பி ஓடிய அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X