search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கன்னியகோவிலில் மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பலி
    X

    கன்னியகோவிலில் மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பலி

    கன்னியகோவிலில் மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற தொழிலாளி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பரிதாபமாக இறந்தார்.

    பாகூர்:

    கிருமாம்பாக்கம் அருகே கன்னியகோவிலை அடுத்த புதுநகரை சேர்ந்தவர் அஞ்சாபுலி (வயது60), விவசாய கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் கன்னியகோவில் புதுவை-கடலூர் மெயின்ரோட்டில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க வந்தார். பொருட்களை வாங்கி கொண்டு சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாரதவிதமாக அவர் மீது மோதியது.

    இதில் கை-கால்கள் முறிவு ஏற்பட்ட அஞ்சாபுலிக்கு வயிற்றில் படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அஞ்சாபுலி இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

    இது குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் பச்சையப்பன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×