என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சூப்பரான சைடிஷ் நண்டு குருமா செய்வது எப்படி
Byமாலை மலர்27 Jun 2017 9:54 AM GMT (Updated: 27 Jun 2017 9:54 AM GMT)
சப்பாத்தி, புலாவ், ஆப்பம், இடியாப்பம், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சூப்பரானது நண்டு குருமா. இன்று இந்த குருமாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நண்டு - 1 கிலோ
எண்ணெய் - தேவையான அளவு
தேங்காய் பால் - 2 டம்ளர்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கொத்தமல்லிதழை - சிறிதளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கரம்மசாலாத்தூள் - ½ டீஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 2
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
அரைக்க :
தேங்காய் துருவல் - அரை கப்
மஞ்சள்த்தூள் - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 3 டீஸ்பூன்
சீரகத்தூள் - 2 டீஸ்பூன்
சோம்புத்தூள் - 1 டீஸ்பூன்
முந்திரி - 6
பாதாம் - 6
பூண்டு - 5 பல்
செய்முறை :
* நண்டை நன்றாக கழுவி வைக்கவும்.
* அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அரைத்த விழுதை பாத்திரத்தில் போட்டு அதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து கரைத்து விட்டு, அதனுடன் பாதி கொத்தமல்லிதழையை சேர்த்து கொள்ளவும்.
* ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் ப.மிளகாய், தக்காளி அரை ஸ்பூன் உப்பும் சேர்த்து வதக்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.
* இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
* இப்பொழுது கரைத்து வைத்திருக்கும் கரைசலை ஊற்றி கொதி வந்தவுடன் நண்டை போட்டு கொதிக்க விடவும்.
* இரண்டு கொதி கொதித்ததும் மிதமான தீயிலேயே வைக்க வேண்டும்.
* குருமா திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
* சூப்பரான சைடிஷ் நண்டு குருமா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நண்டு - 1 கிலோ
எண்ணெய் - தேவையான அளவு
தேங்காய் பால் - 2 டம்ளர்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கொத்தமல்லிதழை - சிறிதளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கரம்மசாலாத்தூள் - ½ டீஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 2
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
அரைக்க :
தேங்காய் துருவல் - அரை கப்
மஞ்சள்த்தூள் - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 3 டீஸ்பூன்
சீரகத்தூள் - 2 டீஸ்பூன்
சோம்புத்தூள் - 1 டீஸ்பூன்
முந்திரி - 6
பாதாம் - 6
பூண்டு - 5 பல்
செய்முறை :
* நண்டை நன்றாக கழுவி வைக்கவும்.
* அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அரைத்த விழுதை பாத்திரத்தில் போட்டு அதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து கரைத்து விட்டு, அதனுடன் பாதி கொத்தமல்லிதழையை சேர்த்து கொள்ளவும்.
* ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் ப.மிளகாய், தக்காளி அரை ஸ்பூன் உப்பும் சேர்த்து வதக்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.
* இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
* இப்பொழுது கரைத்து வைத்திருக்கும் கரைசலை ஊற்றி கொதி வந்தவுடன் நண்டை போட்டு கொதிக்க விடவும்.
* இரண்டு கொதி கொதித்ததும் மிதமான தீயிலேயே வைக்க வேண்டும்.
* குருமா திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
* சூப்பரான சைடிஷ் நண்டு குருமா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X